சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி அதை ஆய்வு செய்ததில் சுவாதி இரண்டு பேரிடம் அதிகமாக சாட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர். அதில் ஒருவரின் தோற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நபரின் உருவத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நபர் தான் சுவாதியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் காவல் துறையினர். மேலும் சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் எனவும், குற்றவாளியை நெருங்கிவிட்டோம் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

சுவாதியின் பேஸ்புக் நண்பரிடம் விசாரணை: கொலையாளியை நெருங்கும் காவல் துறை



சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு யுஎஸ்ஸில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

படத்தை இயக்குவதாக இருந்த ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி வருகிறார்.

தசாவதாரத்தில் வரும் நாயுடு கதாபாத்திரத்தைதான் இதில் கமல் செய்கிறார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், உதவியாளராக பிரம்மானந்தமும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நாயுடு கெட்டப்புடன் கமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை மாதவன் பகிர்ந்திருக்கிறார். சபாஷ் நாயுடு படத்தில் கமலின் கெட்டப் இந்தப் படத்தின் மூலம்தான் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

கெட்டப்பே பல கதைகள் சொல்லுதே பாஸ்.

இதுதான் கமலின் நாயுடு கெட்டப்


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை, அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவரே கொலை செய்திருக்க முடியும் என்று திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் நடந்ததால், முதலில் ரயில்வே போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா, கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை செய்தார் சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது “ இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சுவாதி கொலையில் புதிய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது.

சுவாதியின் தனிப்பட்ட குணநலன்கள் பற்றி அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்தவர்கள் என எல்லோரிடம் விசாரணை செய்து வருகிறோம்.

சுவாதிக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான் இந்த கொலையை செய்திருக்க முடியும். மேலும், எல்லா வழியிலும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். நிச்சயம் கொலையாளியை விரைவில் கைது செய்வோம்” என்று கூறினார்.

ஆனால், தற்போது சுவாதி கொலை வழக்கு, சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுவாதிக்கு நன்கு தெரிந்தவரே கொலை செய்திருக்க முடியும் : ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா பேட்டி



திருப்பூர், சாமுண்டிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், மகேஷ்வரி தம்பதியினர் கருப்பையா என்ற 12 வயது தங்கள் மகனை கருணைக்கொலை செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், தங்கள் மகன் கருப்பையாவுக்கு 1 வயதாக இருக்கும் போது திடீரென காய்ச்சல் வந்து அவரின் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திடீரென எங்கேயாவது வெளியில் சென்றுவிடுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து வீசுவது, உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான்.

மருத்துவர்களிடம் தங்கள் மகனை காண்பித்தும் குணமடைய வாய்பில்லை என தெரிவித்துவிட்டனர். மனநல காப்பகத்தில் சேர்க்கச் சென்றால் அவர்கள் இவனை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றனர். எங்கள் மகனின் நிலையை பார்த்து எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.

எனவே எனது மகன் கருப்பையாவை காப்பகத்தில் சேர்க்க உதவ வேண்டும், இல்லையென்றால் அவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போதே மன வளார்ச்சி குன்றி அந்த சிறுவன் அருகில் இருந்த பொருளை தூக்கி வீசனான். இதனையடுத்து அந்த மனுவை வாங்கிய ஆட்சியர் அந்த சிறுவனை காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.

மன வளர்ச்சி குன்றிய மகனை கருணைக்கொலை செய்ய மனு



சென்னை சூளமேட்டை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது, மக்கள் யாரோனும், குற்றவாளியை புகைப்படமோ வீடியோவோ எடுத்திருந்தால் அவர்கள் கீழ்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.


கே.சங்கர், ஐ.பி.எஸ் - 8939966985.

எஸ். மனோகரன், ஐ.பி.எஸ் - 9840962359, 9498178179

பி. பெருமாள் - 9443481933

கே.பி.எஸ். தேவராஜ் - 9840190505, 9498132707

பி. காளிதீர்த்தன் - 9751804830, 9498127426

எஸ். முத்துவேல்பாண்டி - 9884070878, 9498104839

சுவாதி கொலை பற்றியோ அல்லது கொலையாளி பற்றியோ எந்த தகவல் தெரிந்தாலும், இந்த அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கு : கொலையாளி பற்றிய விவரங்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம்



விஜயகாந்தின் மகன், தான் புதிதாக வாங்கியுள்ள செல்ல நாய்க்குட்டிக்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறி அதிரடியை கிளப்பியிருக்கிறார் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார்.

சட்டமன்ற தேர்தலின் போது, தேமுதிகவிலிருந்து விலகிய சந்திரகுமார், பார்த்திபன் போன்றவர்கள் மக்கள் தேமுதிக என்ற கட்சியை துவங்கினர். அதன்பின் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்து சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விஜயகாந்தை கேப்டன் என்று இதுவரை அழைத்து வந்தோம். இனி அப்படி அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்தின் மகன் பிரபாரன் நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அவர் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து சில லட்சம் மதிப்பிலான ஒரு நாய் ஒன்றை வாங்கி வந்திருக்கிறார்.

அந்த நாய்க்கு ‘கேப்டன்’ என்று பெயர் சூட்டி, ஒரு நாயை கேப்டன் கேப்டன் என்று அனைவரும் வீட்டில் அழைத்து வருகின்றனர். இதை விட அவரை வேறு யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது. அப்படியெனில் அவரும் நாயா ஒன்றா?.. வீட்டையே தன் கட்டுப்பாட்டில் வைக்காதவர் எப்படி தேமுதிகவை கட்டுப்படுத்த முடியும்?. எனவே இனிமேல் அவரை விஜயகாந்த் என்றுதான் அழைப்போம்.

அடுத்த சட்டசபை தேர்தலில் தேமுதிக என்ற கட்சியே தமிழகத்தில் இருக்காது என்று நான் உறுதியாக சொல்கிறேன்” என்று கூறினார்.

கேப்டனும் நாயும் ஒன்றா? : கொதிக்கும் சந்திரகுமார்




தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தின் எதிரொலியாக விஜயகாந்த் தன்னுடைய அனுகுமுறையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் கட்சியில் யாருடனும் கேட்காமல் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பாத கூட்டணியை அமைத்ததாகவும் எந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

இந்த கடிதத்தில் முக்கிய ஒன்றாக கூறப்படுவது விஜயகாந்த் நடத்தி வரும் டிரஸ்ட் தொடர்பான கணக்குகளை பற்றி அவர்கள் கேட்டது. தேர்தல் நிதியாக கடந்த காலங்களில் வசூலித்து தந்த ரூ.500 கோடி எங்கே என்ற கேள்வி விஜயகாந்தை நிச்சயம் ஆட்டம் காண வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

எதற்கெடுத்தாலும் கோபப்படும், கட்சியை கலைக்கவும் தயங்கமாட்டேன் என சொல்லும் விஜயகாந்திடம், தயவு செய்து கட்சியை கலைத்து விட்டு, எங்களை பிழைக்க விடுங்கள் என அதிரடியாக அவர்கள் கூறி இருப்பது. தாங்களும் அடுத்த கட்சிக்கு போக தயாராக இருக்கிறோம் என விஜயகாந்துக்கு விடுத்த சவாலாகவே பார்க்கப்படுகிறது.

கட்சியினரின் இந்த கடிதத்தை சற்றும் எதிர்பார்க்காத விஜயகாந்த், குற்றச்சாட்டுகளை வைத்த மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக போனில் பேசியதாக கூறப்படுகிறது.

அவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்ட விஜயகாந்த, கட்சியில் இப்பொழுது யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், தனக்கு ஒத்துழைப்பு தாருங்கள், நடந்த சம்பத்துக்கு மன்னிப்பு கேட்டதாகவும், டிரஸ்ட் தொடர்பான கணக்குகளை சமர்ப்பிக்க கூட தயாராக இருப்பதாகவும் விஜயகாந்த் பேசியதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் விஜயகாந்தின் இந்த சமரச பேச்சை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவே கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தேமுதிக வட்டாரத்தில் எகிறி உள்ளது.

14 பேர் கடிதம்; கதிகலங்கி போன விஜயகாந்த்



திரைப்பட நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க உள்ளார். விக்ரமின் மாப்பிள்ளையாகப் போகிறார் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்.

நடிகர் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விக்ரமுக்கு மருமகனாக வர இருப்பவர் கவின்கேர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரனும், கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரனும் ஆவார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை 10-ஆம் தேதி சென்னையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் எனவும், இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதி குடும்பத்தோடு சம்பந்தம் வைக்கும் நடிகர் விக்ரம்


தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த சுவாதி படுகொலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளியை அடையாளம் காண்பதிலும், அவனை பிடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆனால், ரயில் நிலையத்தின் வெளியே அருகில் உள்ள வீடுகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளியின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வரும் காவல் துறை, சுவாதியின் பேஸ்புக் கணக்கை முடக்கி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

சுவாதியின் மொபைல் போன் காணாமல் போனதையொட்டி அவரது நம்பர் தொலைந்துவிட்டதாக கூறி அதே நம்பரை திரும்ப பெற்று அவரது வாட்ஸ் ஆப்பை ஓப்பன் செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் காவல் துறையினர்.

இந்நிலையில், சூளைமேட்டில் உள்ள கங்கையம்மன் கோயில் பூசாரி காவல் துறைக்கு ஒரு துப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. சுவாதி அவரது வீட்டின் அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு போகும் பழக்கம் உள்ளவராம்.

சுவாதி கொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு அந்த கோயிலுக்கு சென்றபோது சுவாதிக்கு பின்னால் வந்து நின்ற ஒருவர், என்னை தெரியுதா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுவாதி இல்லை உங்கள தெரியலையே என்று கூறியுள்ளார். நல்லா யோசிச்சி பாரு நான் யாருன்னு தெரியும் என்று சொல்லிவிட்டு போனாராம் அந்த நபர்.

இதை கவனித்த அந்த கோயில் பூசாரி தற்போது காவல் துறையிடம் கூறியுள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவான அந்த நபரின் உருவமும் கோயிலில் சுவதியை பின் தொடர்ந்த நபரின் உருவமும் ஒன்றா என காவல் துறை பூசாரியிடம் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சுவாதியிடம் கோயிலில் பேசிய நபர் யார்?: நல்ல யோசித்து பார் நான் யாருன்னு தெரியும்



நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதி மற்றவர்களுக்கு உதவுவதில் சிறந்து விளங்கினார் என்பது தெரியவந்துள்ளது. அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என அவரது தந்தை கூறியுள்ளார்.

சுவாதி வெட்டப்பட்டு 2 மணி நேரமாகியும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அவரது தந்தை சுவாதியை பற்றி கூறியுள்ள ஒரு செய்தி மனதை கலங்க வைக்கிறது.

சுவாதி மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். அவள் வீரம் மிக்க பெண்மணியாக திகழ்ந்தார். ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்ட எனது மகளுக்கு இறக்கும் நேரத்தில் யாரும் உதவ முன்வரவில்லை என்பதை நினைக்கும் போது மிக வேதனையாக உள்ளது என்றார்.

மேலும் சுவாதி தான் இறந்த பின்னர் தன்னுடைய உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்ததாக கூறினார். மருத்துவமனையில் சுவாதியை சேர்த்திருந்தால் அவர் விருப்பப்படியே உடல் உறுப்பு தானம் செய்திருக்கலாம், ஆனால் அதற்கு கூட முடியாமல் போய்விட்டது. சுவாதியின் முக்கியமான இந்த விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது என அவரது தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் கூறினார்.

சுவாதியின் கடைசி ஆசை நிறைவேறவில்லை: தந்தை ஆதங்கம்



கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்து வரும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷோ, நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையை போக்க அந்நாட்டு மக்கள் அனைவரையும் ஆடைகளை கழற்றிவிட்டு வியர்வை சிந்த உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிபரின் ஆணையை ஏற்று அந்நாட்டு மக்கள் பலரும் அவர்களது பணியிடங்களில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக வேலை செய்ய தொடங்கியுள்ளனர். அதை அவர்கள் சமுக வலைதளங்களில் புகைப்படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இச்செய்தி தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

அதிபரின் வேண்டுகோளை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்



பிரபலங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்படும் போது யாருமே இந்த சம்பவத்தை போட்டோ எடுக்கவில்லை? யாருக்கும் மடக்கி பிடிப்பதற்கு துணிச்சல் இல்லையா? என்று நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதியின் குடும்பத்தினரை இன்று குஷ்பு சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "சென்னை நுங்கம்பாக்கத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சுவாதி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை தடுக்காமல் எல்லோருமே வேடிக்கை பார்த்துள்ளனர்.

நம்ம வீட்டில் இப்படி நடந்தால் நாம் காப்பாற்ற மாட்டோமா? யாருக்கும் ஏன் துணிச்சல் வரவில்லை? போலீசை குறை கூறுவது சரியல்ல. இதனையும் தாண்டி சுற்றி இருக்கும் மக்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு.

தமிழ்நாட்டில் கடைசியாக இந்த சம்பவம் இருக்கட்டும். இந்த கொலையை பார்க்கும்போது, சுவாதியின் பெற்றோர் மட்டும் ஒரு குழந்தையை இழக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை நாம் இழந்திருக்கிறோம்.

பிரபலங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்படும் போது யாருமே இந்த சம்பவத்தை போட்டோ எடுக்கவில்லை? யாருக்கும் மடக்கி பிடிப்பதற்கு துணிச்சல் இல்லையா?

சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

செல்ஃபி எடுக்க ஆசைப்படுபவர்கள் சுவாதி கொலையை எடுக்கவில்லையா? - குஷ்பூ கோபம்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து அதிமுகவின் வெற்றிக்கு உதவிய விஜயகாந்த் ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.700 வாங்கியதாக மக்கள் தேமுதிகவை சேர்ந்த சந்திரகுமார் புதிய புயலை கிளப்பியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேராமல், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்த தேர்தலை சந்தித்ததால் தேமுதிகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார் சந்திரகுமார்.

பின்னர் திமுக உடன் கூட்டணி வைத்த மக்கள் தேமுதிக மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை திமுக இணைக்க முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், விஜயகாந்த் எங்களை கடனாளியாக்கி விட்டு, தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடு தெருவுக்கு வந்து விட்டார்கள்.

10 சதவீதம் இருந்த வாக்கு வங்கியை விஜயகாந்த் வெறும் 2.4 சதவீதமாக ஆக்கிவிட்டார். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. மக்கள் விஜயகாந்தை நிராகரித்து விட்டனர். தேமுதிக அடுத்த தேர்தலில் இருக்காது. விஜயகாந்தால் தன்னுடைய வீட்டில் உள்ளவர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை.

14 மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதத்திற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார். எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு அவர் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்றார் சந்திரகுமார்.

ஜெயலலிதாவிடம் ரூ.700 கோடி வாங்கிய விஜயகாந்த்: போட்டுத் தாக்கும் சந்திரகுமார்


கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இணையத்தளத்தில் இளைஞர்களும், பொதுமக்களும் வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு கீழே:

ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால், ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடகங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள்.

திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காமரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்.

என்ன செய்வது இறந்தது பிராமண பெண் இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்???

இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



உண்மையிலேயே ஒய்.ஜி.மகேந்திரன் தான் இந்த பதிவின் மூலம், இறந்து போன சுவாதிக்காக கண்ணீர் விடும், அவளின் இழப்பினை தங்களது மகளாக பாவிக்கும் லட்சோப லட்ச மக்களின் மனங்களில் நஞ்சினை விதைக்கப் பார்க்கிறார்.

முதலாவதாக கொலையாளியை குறித்து எந்தவிதமான தெளிவான தகவலும் காவல்துறைக்கே தெரியாத நிலையில், கொலை செய்தது ’பிலால் மாலிக்’ என்ற இஸ்லாமிய நபர் ஒருவரின் பெயரை தெரிவித்ததன் மூலம், அவர் தனக்கிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மீண்டும் ஒரு அயோத்தியில் ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போன்று மற்றொரு சம்பவம் நடைபெறுவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மனப்பாண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், போகிற போக்கில் திராவிட அரசியல் பேசுவர்களை பொறுக்கிகள் என்றும் இடதுசாரிகளையும், அதன் அங்கமான மாதர் சங்கத்தையும் கயவர்கள் என்றும் கயமைத்தனமாகவே கூறியுள்ளார்.

தமிழகத்தின் தேசியகீதமான (?) ’பீப்’ பாடல் விவாகரத்தில் தமிழகத்தின் தலைசிறந்த (?!) இசையமைப்பாளரான, தங்களது இனத்தவரான அனிருத் ரவிச்சந்திரனுக்கு எதிராக போராடியதற்காக தற்போது அந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார்.

மேலும், திராவிட அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, ஆரிய அரசியல் பேச வேண்டும் என்று நினைத்திருப்பதையும் காண முடிகிறது. இதனால்தான், இவ்வளவு பிராமணப் பாசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நிச்சயம் இது கண்டிக்கத்தக்கது. இது தலித் பெண்ணா அல்லது பிராமணிய பெண்ணா என்பது தேவை இல்லாதது. ஒரு சமூகத்தின் கேடுகெட்ட நிலை இந்த படுகொலை.



ஆனால், ஒரு இறப்பின் மூலம் இப்போது ஒய்.ஜி.மகேந்திரன் தான் ஆதாயம் தேடுகிறார். இது தவிர, தலித் என்றால் மகேந்திரனுக்கு ஏன் கசக்கிறது. காலங்காலமாக அவர்கள் இவர்களை போல ஆதிக்கச் சாதியினர்களால் ஒடுக்கப்பட்டு வந்தார்களே!.

தற்போதும் கூட, கோவிலுக்குள் ஒரு தலித் பெண் நுழைந்த காரணத்தால் அந்த கோவிலின் ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக அபராதம் விதித்துள்ளனர். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் என்ன செய்தார்?

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு, தலித்துகளின் குடிசைகள், கோவில் தேர் எரிக்கப்பட்டு, தலித் பெண்கள் ஆடைகள் உருவப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் என்ன செய்தார்?

உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக, அந்த வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் என்ன செய்தார்?

இவ்வளவு ஏன்? கடந்த மார்ச் மாதம் உடுமலைப்பேட்டை சங்கர், உயர்சாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பட்டப்பகலில் நடுரோட்டில் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாரே! ஏன் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு வார்த்தை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் 19 வயது மாணவி தனது காதலன் மற்றும் தனது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றனர். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் எங்கே சென்றார்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், கேரளாவைச் சேர்ந்த தலித் மாணவியை சீனியர் மாணவிகள் பினாயிலைக் குடிக்க வைத்த சம்பவம் அரங்கேறியது. அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் எங்கே சென்றார்?

இறந்தது யாராயினும் அது ஒரு உயிரிழப்பு. குற்றத்தை களைய வேண்டியது ஒரு அரசின், அதிகாரிகளின் கடமை. ஆனால், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டியதும் அவசியம்.

ஆனால், அதற்கு மாறாக இது போன்று வார்த்தைகள் மூலம், மேலும் சாதிய உணர்வுகளையும், மத உணர்வுகளையும் தூண்டி சமூகத்தில் வன்முறையை தூண்டுவது எந்த வகையில் நியாயம் ஒய்.ஜி.மகேந்திரன்?

சுவாதி கொலை - சாதி,மத உணர்வை தூண்டுகிறாரா ஒய்.ஜி.மகேந்திரன்?



(28/06/2016) Ayutha Ezhuthu Neetchi | Vinupriya Suicide : haven't we learn Lessons yet...?







Ayutha Ezhuthu 28-06-2016

Ayutha Ezhuthu 28-06-2016





 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

EMI Thavanai Murai Vazhkai Sun Tv Serial 28-06-16 Episode 81




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 28-06-16 Raj Tv Serial Episode 93



"G.V. Prakash teasing Ajith and Ajith Fans are angry on GVP" - GVP vs Ajith Fans Issue








Nagini 28-06-2016 - Sun Tv Serial Episode 02




Moondru Mudichu 28-06-16 Polimer Tv Serial Episode 122



Director Vasantha Balan criticizing "MODI Government" - Latest Kollywood News



Vikram Becomes DMK's Sambandhi - Vikram's Daughter Weds DMK's Manu Ranjith |



G.V. Prakash Ends Anandhi collaboration in fear of a new scanda







Polimer Tv Serial Inai Kodugal 28-06-16







SOURCE – 02



Vijay Tv Show Neengalum Vellalam Oru Kodi 28-06-16






 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kanchana 28-06-16 Raj Tv Serial Episodse 243







Urave Uyire 28-06-16 Polimer Tv Serial Episode 301






Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 28-06-2016 Episode 416


இராட்சத தோசை சுட ஓர் அற்புதமான வில்லேஜ் தொழில்நுட்பம்!


நீங்கள் இந்த சிம்பலை எல்லா இடங்களிலும் பார்த்து இருக்க முடியும். மிக பிரபலமான இந்த சிம்பலை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் மீது எல்லோருமே பார்த்திருப்போம். நீங்கள் ஆன் செய்து ஆப் செய்யும் உங்கள் மொபைல், டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் ஓவன், வாஷிங் மெஷின், உள்பட அனைத்து எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பவர் பட்டன் மீது இந்த சிம்பள் இருக்கும்.

ஆனால் இந்த சிம்பலுக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? எந்த லாஜிக் அடிப்படையில் அந்த சிம்பல் டிசைன் செய்துள்ளார்கள் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது ஐடியாக இருக்கிறதா?.

நம்புங்கள், இந்த பவர் பட்டன் சிம்பல் குறித்து ஒரு மிகவும் இன்ட்ரஸ்டிங்கான ஒரு லாஜிக் உள்ளது. இதன் மூலம் அந்த சிம்பலுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் மேல சிலைடரில் இருக்கும் பவர் பட்டன் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. முதலில் படித்துக்கொண்டிருந்ததால், அந்த படத்தை சரியாக பார்த்திருக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும்.

அடுத்த படத்தை மீண்டும் பாருங்கள். அதில் I மற்றும் o என்று பொறிக்கப்பட்டிருக்கும். 3வது படத்தை பாருங்கள், உடைந்த வளையத்தில் 1 மற்றும் 0 என்று இருப்பது போல் தெரிகிறதா?.

இரண்டாவது உலகப்போரின் போது என்ஜினியர்கள் பைனரி சிஸ்டத்தின்படி பவர் பட்டனுக்கு இந்த சிம்பலை பயன்படுத்தினார்கள். பைனரி சிஸ்டத்தின் படி 1 என்றால் ‘on’ என்றும் 0 என்றால் ‘off’ என்று அர்த்தம்.

இறுதியாக 1973ம் ஆண்டு சர்வதேச எலக்ட்ரானிக் கமிஷன்(IEC), பவர் பட்டனுக்கு அந்த சிம்பள் தான் பயன்படுத்த வேண்டும் என்று வரைமுறை வகுத்தது.

பவர் பட்டன் சிம்பள் பல்வேறு பொட்களில் இருக்கிறது. அது on மற்றும் off என்ற வடிவியே அவை செயல்படுகிறது. அதனால் தான் அவை I மற்றும் O என்று வேறுபடுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான பட்டன்களும், on மற்றும் off என்ற வடிவில் தான் உள்ளது. அதனால் தான் இந்த சிம்பல் வைக்கப்பட்டுள்ளது.

NYC condom wrapperல் இந்த பவர் பட்டன் சிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரியான பொருட்களுக்கு எல்லாம் பவர் பட்டன் சிம்பல் பயன்படுத்தப்படுவதை யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டோம்.

பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் தெரியுமா?



Naturals Founder Veena about Kareena Kapoor being their Ambassador | Penn Drive | Bosskey TV



Vishal posted a private photo with Varalaxmi Sarathkumar - Love and marriage



"Kabali Poster is Mine, It is copied" - Irfan's Shocking Comment on Kabali Poster



The reason behind Rajinikanth has gone to America