ஜெயலலிதாவிடம் ரூ.700 கோடி வாங்கிய விஜயகாந்த்: போட்டுத் தாக்கும் சந்திரகுமார்

Share this :
No comments


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து அதிமுகவின் வெற்றிக்கு உதவிய விஜயகாந்த் ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.700 வாங்கியதாக மக்கள் தேமுதிகவை சேர்ந்த சந்திரகுமார் புதிய புயலை கிளப்பியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேராமல், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்த தேர்தலை சந்தித்ததால் தேமுதிகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார் சந்திரகுமார்.

பின்னர் திமுக உடன் கூட்டணி வைத்த மக்கள் தேமுதிக மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை திமுக இணைக்க முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், விஜயகாந்த் எங்களை கடனாளியாக்கி விட்டு, தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடு தெருவுக்கு வந்து விட்டார்கள்.

10 சதவீதம் இருந்த வாக்கு வங்கியை விஜயகாந்த் வெறும் 2.4 சதவீதமாக ஆக்கிவிட்டார். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. மக்கள் விஜயகாந்தை நிராகரித்து விட்டனர். தேமுதிக அடுத்த தேர்தலில் இருக்காது. விஜயகாந்தால் தன்னுடைய வீட்டில் உள்ளவர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை.

14 மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதத்திற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார். எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு அவர் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்றார் சந்திரகுமார்.

No comments :

Post a Comment