செல்ஃபி எடுக்க ஆசைப்படுபவர்கள் சுவாதி கொலையை எடுக்கவில்லையா? - குஷ்பூ கோபம்

Share this :
No comments


பிரபலங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்படும் போது யாருமே இந்த சம்பவத்தை போட்டோ எடுக்கவில்லை? யாருக்கும் மடக்கி பிடிப்பதற்கு துணிச்சல் இல்லையா? என்று நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதியின் குடும்பத்தினரை இன்று குஷ்பு சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "சென்னை நுங்கம்பாக்கத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சுவாதி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை தடுக்காமல் எல்லோருமே வேடிக்கை பார்த்துள்ளனர்.

நம்ம வீட்டில் இப்படி நடந்தால் நாம் காப்பாற்ற மாட்டோமா? யாருக்கும் ஏன் துணிச்சல் வரவில்லை? போலீசை குறை கூறுவது சரியல்ல. இதனையும் தாண்டி சுற்றி இருக்கும் மக்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு.

தமிழ்நாட்டில் கடைசியாக இந்த சம்பவம் இருக்கட்டும். இந்த கொலையை பார்க்கும்போது, சுவாதியின் பெற்றோர் மட்டும் ஒரு குழந்தையை இழக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை நாம் இழந்திருக்கிறோம்.

பிரபலங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்படும் போது யாருமே இந்த சம்பவத்தை போட்டோ எடுக்கவில்லை? யாருக்கும் மடக்கி பிடிப்பதற்கு துணிச்சல் இல்லையா?

சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment