கேப்டனும் நாயும் ஒன்றா? : கொதிக்கும் சந்திரகுமார்

Share this :
No comments


விஜயகாந்தின் மகன், தான் புதிதாக வாங்கியுள்ள செல்ல நாய்க்குட்டிக்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறி அதிரடியை கிளப்பியிருக்கிறார் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார்.

சட்டமன்ற தேர்தலின் போது, தேமுதிகவிலிருந்து விலகிய சந்திரகுமார், பார்த்திபன் போன்றவர்கள் மக்கள் தேமுதிக என்ற கட்சியை துவங்கினர். அதன்பின் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்து சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விஜயகாந்தை கேப்டன் என்று இதுவரை அழைத்து வந்தோம். இனி அப்படி அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்தின் மகன் பிரபாரன் நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அவர் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து சில லட்சம் மதிப்பிலான ஒரு நாய் ஒன்றை வாங்கி வந்திருக்கிறார்.

அந்த நாய்க்கு ‘கேப்டன்’ என்று பெயர் சூட்டி, ஒரு நாயை கேப்டன் கேப்டன் என்று அனைவரும் வீட்டில் அழைத்து வருகின்றனர். இதை விட அவரை வேறு யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது. அப்படியெனில் அவரும் நாயா ஒன்றா?.. வீட்டையே தன் கட்டுப்பாட்டில் வைக்காதவர் எப்படி தேமுதிகவை கட்டுப்படுத்த முடியும்?. எனவே இனிமேல் அவரை விஜயகாந்த் என்றுதான் அழைப்போம்.

அடுத்த சட்டசபை தேர்தலில் தேமுதிக என்ற கட்சியே தமிழகத்தில் இருக்காது என்று நான் உறுதியாக சொல்கிறேன்” என்று கூறினார்.

No comments :

Post a Comment