மன வளர்ச்சி குன்றிய மகனை கருணைக்கொலை செய்ய மனு
திருப்பூர், சாமுண்டிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், மகேஷ்வரி தம்பதியினர் கருப்பையா என்ற 12 வயது தங்கள் மகனை கருணைக்கொலை செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், தங்கள் மகன் கருப்பையாவுக்கு 1 வயதாக இருக்கும் போது திடீரென காய்ச்சல் வந்து அவரின் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திடீரென எங்கேயாவது வெளியில் சென்றுவிடுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து வீசுவது, உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான்.
மருத்துவர்களிடம் தங்கள் மகனை காண்பித்தும் குணமடைய வாய்பில்லை என தெரிவித்துவிட்டனர். மனநல காப்பகத்தில் சேர்க்கச் சென்றால் அவர்கள் இவனை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றனர். எங்கள் மகனின் நிலையை பார்த்து எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.
எனவே எனது மகன் கருப்பையாவை காப்பகத்தில் சேர்க்க உதவ வேண்டும், இல்லையென்றால் அவனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போதே மன வளார்ச்சி குன்றி அந்த சிறுவன் அருகில் இருந்த பொருளை தூக்கி வீசனான். இதனையடுத்து அந்த மனுவை வாங்கிய ஆட்சியர் அந்த சிறுவனை காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment