சுவாதியின் கடைசி ஆசை நிறைவேறவில்லை: தந்தை ஆதங்கம்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதி மற்றவர்களுக்கு உதவுவதில் சிறந்து விளங்கினார் என்பது தெரியவந்துள்ளது. அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என அவரது தந்தை கூறியுள்ளார்.
சுவாதி வெட்டப்பட்டு 2 மணி நேரமாகியும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் அவரது தந்தை சுவாதியை பற்றி கூறியுள்ள ஒரு செய்தி மனதை கலங்க வைக்கிறது.
சுவாதி மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். அவள் வீரம் மிக்க பெண்மணியாக திகழ்ந்தார். ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்ட எனது மகளுக்கு இறக்கும் நேரத்தில் யாரும் உதவ முன்வரவில்லை என்பதை நினைக்கும் போது மிக வேதனையாக உள்ளது என்றார்.
மேலும் சுவாதி தான் இறந்த பின்னர் தன்னுடைய உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்ததாக கூறினார். மருத்துவமனையில் சுவாதியை சேர்த்திருந்தால் அவர் விருப்பப்படியே உடல் உறுப்பு தானம் செய்திருக்கலாம், ஆனால் அதற்கு கூட முடியாமல் போய்விட்டது. சுவாதியின் முக்கியமான இந்த விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது என அவரது தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment