ஐந்து கட்சித் தலைவர்களின் பெயரைச் சொல்லி, ஐந்து கட்சிகளைச் சொல்லி, அவர்களின் சின்னங்களைச் சொல்லி ஓட்டு கேட்டுப் பார் நான் எனது ஒரு பக்கத்து மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.
திருவாரூர் பனகல் சாலையில் அதிமுக சார்பில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "புளிய மரத்தைக் கண்டாலே எனக்கு ராமாதாஸ் ஐயா தான் நியாபகத்துக்கு வருகிறார். அவர் தான், இந்த சாதி சங்கத்தை நான் கட்சியாக மாற்றுகிற போது, என் கட்சியைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பிற்கு வந்தால் புளியமரத்தில் கட்டி வைத்து என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார்.
விஜயகாந்தைப் பற்றி பேசுவதற்கு என்னைத் தவிர சிறந்தவன் இருக்க முடியாது. நான்கு இருந்தார்கள். வைகோ, திருமா, இராமகிருஷ்ணன், முத்தரசன், நாலு பேரு சரியா இருக்கோமே. யார், யாரைத் தூக்குவது என்று? மூன்று பேர் தூக்கக் கூடாது, நான்கு பேர் தான் தூக்கணும்.
மேல படுக்க ஆள் வேணும் எனும் போது தான் சரியாக மாட்டினார் விஜயகாந்த். நான்தான் முதலமைச்சர், என்னைத் தான் தூக்கணும் என்றார். உடனே இவர்களும் நீ தான் தலைவன் என்று அழைத்துக் கொண்டனர்.
திடீர்னு விஜயகாந்துக்கு ஞானோதயம் வந்து நிறுத்து.. நிறுத்து.. முன்னாடி கொள்ளி தூக்க வேண்டுமல்லவா? அதையும் நீங்களே சொல்லுங்கள். என்னிடம் ஜி.கே.வாசன் இருக்கிறார், அவரை அழத்துக்கொண்டு வருகிறேன் என்று அழைத்து வந்தார்.
நீங்கள் அம்மாவை கிண்டல் செய்கிறீர்கள். நான் விஜயகாந்திற்கு ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் காரில் தனியாக இறங்கி, தனியாக நடந்து, படிகட்டு தனியாக ஏறி, உங்கள் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்து மைக்கை பிடித்து, உங்கள் கூட்டணியில் இருக்கக் கூடிய ஐந்து கட்சித் தலைவர்களின் பெயரைச் சொல்லி, ஐந்து கட்சிகளைச் சொல்லி, அவர்களின் சின்னங்களைச் சொல்லி ஓட்டு கேட்டு, என்றைக்கு தேர்தல் என்று சொல்லிவிட்டால் நான் எனது ஒரு பக்கத்து மீசையை எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
No comments :
Post a Comment