அன்புள்ள அம்மா பேசுகிறேன் : மீண்டும் வாட்ஸ் அப்பில் ஜெயலலிதா
திமுகவிற்கு ஈடு கொடுக்க, வாட்ஸ் அப் முலம் பிரச்சாரம் செய்ய அதிமுக முடிவெடுத்துள்ளது.
தினசரி செய்திதாள்கள், செய்தி இணைய தளங்கள் என பல்வேறு வகைகளில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை செம்மையாக செய்து வருகிறது. திமுகவிற்கு ஈடு கொடுப்பதற்காக அதிமுக, வாட்ஸ் அப் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
நமது தொலைபேசிக்கு ஒரு வீடியோ வருகிறது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.
“வணக்கம்.. நான் உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன். நினவிருக்கிறதா உங்களுக்கு.. திமுக ஆட்சியில் 15 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. பள்ளி குழந்தைகள் படிக்க முடியவில்லை. தொழிற்சாலைகள் முடங்கின. துன்பங்கள் பெருகின. அது அந்த காலம்..
தற்போது தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. மக்களுக்கு இப்போது தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.
இந்த மகத்தான சாதனை தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர். நன்றி.. வணக்கம்” என்று அவர் பேசுகிறார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment